கோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை- பாகம்- 1 – சேதுராசா-

June 16, 2020 Admins 0

மகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாக கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரச தலைவராக பதவியேற்ற பின்பாக, தான் வெற்றி பெறக் … மேலும்

முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும்- மறவன்

May 16, 2020 Admins 0

எப்போதும் எதையும் தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆண்டுகள் நிறைவிலும் இத்தகைய வரலாற்று அவலத்திலே தான் தமிழர்களின் விடுதலை அரசியலும் இருக்கின்றதென்பதை முள்ளிவாய்க்காலின் பின்னவல காலப்பகுதியின் முதற் பதினோராண்டுகள் வெறுப்புடன் சொல்லிச் செல்கின்றது. … மேலும்

திரை சொல்லும் கதை – ‘சரபினா’ ஆபிரிக்காவின் விடுதலை வேட்கை -செல்வி-

May 5, 2020 Admins 0

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஒடுக்குமுறையரசின் வெறியாட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மண்ணின் மக்களிடத்தில் வீறிட்ட விடுதலையுணர்வையும் அது வெளிப்படுத்தி நிற்கும் பல அரசியல்களையும் அறிவிக்கும் அறிகருவியாக “சரவினா”என்ற திரைப்படம் வெளியாகியது. அதன் ஒவ்வொரு காட்சிப்படிமங்களும் ஒடுக்கப்பட்ட எமது வலிகளுடன் உயிரூட்டமாக உணர்வில் கலந்துள்ளதால், இத்திரைக்காவியம் சரிவரப் … மேலும்

கோத்தாவும் கொரோனாவும்     -முத்துச்செழியன்-

April 24, 2020 Admins 0

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த இயலாதவர்களாக்கி சிறிலங்காவை அச்சுறுத்தலற்ற நாடாக்க வேண்டும் என்ற வேணவாவை … மேலும்

மருத்துவம் தொடர்பாக தமிழ்த்தேசியத்தின் நோக்கு – சேதுராசா-

April 11, 2020 Admins 0

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்கு செழுமையான வாழ்நெறியையும் கற்றுக்கொடுத்தது எனக் கூறுவது மிகையன்று. இவ்வாறாக, தமிழர்கள் வரலாற்றின் வழி பண்டுதொட்டு தமிழர்தாயக … மேலும்

இனியுங் காலந்தாழ்த்தினால் நாம் எமது மண்ணில் எதுவுமற்றவர்கள் ஆவோம் -காக்கை-

April 10, 2020 Admins 0

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கைத்தீவு ஊரங்கினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியில் மக்களுக்காக பணியாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுவரும் அனைத்து இளையோருக்கும் காகம் இணையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வைரஸ் … மேலும்

அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்-

March 6, 2020 Admins 0

தமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ள இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை நலனுக்காக கொடுத்த முழு ஒத்துழைப்புடனும் சீனா, பாகித்தான் அடங்கலான நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் … மேலும்

தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-

February 19, 2020 Admins 0

தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற பெருங்குறைகள் எனலாம். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், கசப்பானதாயினும் உண்மைநிலையை உணர்ந்துகொள்ளவும் முனைப்பேதும் காட்டாத … மேலும்

தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? – மறவன்-

February 4, 2020 Admins 0

1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய மாயையை அடியொற்றிய இனவெறிக்கருத்துடன் மகாவம்சவழிப் புரட்டின்பால் அமைந்த கீழ்நிலைக் கட்டுக்கதைகளுடன் உருவெடுத்த சிங்கள … மேலும்

தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு : வாழ்வியல் -செல்வி-

January 25, 2020 Admins 0

(தாய்த்தமிழ்நாட்டில் கிந்திமொழித் திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்க தம் உயிரை ஈந்த மொழிப்போர் ஈகியரை நினைவுகூரும் இந்நாளில் (2020.01.25) இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது)

இனவியலின் தொடர்ச்சியின் முதன்மைக்கூறாக இருக்கின்ற மொழியினை, இன்று வெறுமனே தொடர்பாடலுக்குரிய ஊடகம் என்ற கருத்தியலுக்குள் சிக்கவைத்து, இனவியலின் இருத்தலைக் … மேலும்