எம் வானின் தாரகைகள் – திரு

நானென்றும் நீயென்றும்
நடக்கின்ற உலகத்தில்
நாமென்று வழி காட்டினீர் நம்
நாடியில் உணர்வூட்டினீர்

கூனாகிக் கிடந்த எம்
குலத்தினை நிமிர்த்தினீர்
குன்றாக்கி விளக்கேற்றினீர் எம்
கொள்கையை நெய்யூற்றினீர்

இடியேதான் வீழ்ந்தாலும்
ஏனென்று கேட்காத
எம்மிலே செவி பூட்டினீர் எம்
இனத்துக்கு விழி நீட்டினீர்

நான் செத்துப் போனாலும்
நாம் சாகக் கூடாது
என்பதை வாழ்வாக்கினீர் எம்
எதிர்காலத் திசைகாட்டி நீர்

உம் வாழ்வுத் தடம் பற்றி
உருள்கின்ற எம் காலம்
தம் காலம் தனைஆக்குமாம் உம்
உயிர்ச்சோதி அதைப் பார்க்குமாம்.

 

திரு

05-07-2018

 4,296 total views,  3 views today

(Visited 3 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply